Tuesday, January 11, 2011

பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்..

Posted by Mr.Mobiles Service And Training Center 8:50 PM, under | No comments

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.
மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில், தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே, இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில், இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள், வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து, தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது? பறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில், நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள் நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும், தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

ஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்:   لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
22:65   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

உலகம் தன் முடிவை நோக்கி!

Posted by Mr.Mobiles Service And Training Center 8:49 PM, under | No comments


إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வ†ீ மூலம் அறிவித்ததனால்.
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிாிவினர்களாகப் பிாிந்து வருவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குாிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ  அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குாிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99: 1-8)
قُل لاَّ أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلاَ نَفْعًا إِلاَّ مَا شَاء اللّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاء أَجَلُهُمْ فَلاَ  يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ(நபியே!) நீர் கூறும் ”அல்லா‹ நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”  (அல்குர்ஆன் 10:49)
    சமீப காலத்தில் சுனாமி பேரலைகள், கட்ரினா, ரீட்டா வில்மா என அடுக்கடுக்காக கடும் புயல்கள், நில நடுக்கங்கள், கடும் மழை பெரும் வெள்ளம் காட்டுத் தீ என பல இயற்கை சீற்றத்தால் உலகில் பல்லாயிரம் மக்கள் மாண்டு வருகிறார்கள். பல்லாயிரம் கோடி பொருள் சேதம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதல்லாமல் ஓ&ே#402;ானில் ஓட்டை, சுற்றுச் சூழல் மாசுபடல் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வடியும் நிலை. அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல ஊர்கள், நாடுகள் நீரில் மூழ்கி அழியும் நிலை என உலகம் அழிவை நோக்கி விரைகிறது.
    எல்லாம் வல்ல ஏக இறைவன் தன் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் மூலம் எச்சரித்த எச்சரிக்கைகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் உலகம் அழியத்தான் போகிறது. உலக அழிவுக்குச் சமீபமாக உள்ள இந்த நிகழ்வுகள் கொண்டு மனிதன் பாடம் கற்க வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மனிதன் மனிதனாக மனித நேயத்துடன் வாழ, வாழ வைக்க முன்வரவேண்டும்.
    இந்த பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களின் துயரங்களை போக்க மனித ஆர்வலர்கள் எண்ணற்றோர் களத்தில் குதித்து பெரும் முயற்சிகள் எடுப்பதை கடந்த டிசம்பர் 26லிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மனித நேயத்தின் வெளிப்பாடாகும். இந்தப் பேரழிவுகளால் மக்கள் படும் கடும் துன்பத்தை நேரடியாகப் பார்த்ததால் உள்ளம் உருகி, அத்துன்பத்தைப் போக்க தன்னால் முடிந்ததைச் செய்ய முன்வருகிறார்கள் மனித நேய ஆர்வலர்கள். இதுவே மனித பண்பாடாகும். சகமனிதர்களின் துன்பங்கள், துயரங்களில் தானும் பாங்கு கொண்டு அத்துன்பங்களைப் போக்க பாடுபடுவது புனிதமான செயலாகும்.
    மனிதர்கள் தங்களின் புறக்கண்களால் பார்க்கும் இந்தக் கொடிய துன்பங்களைவிட பல மடங்கு கொடிய துன்பங்களை தங்களின் அகக்கண்களால் காணத்தவறிவிடுகிறார்கள். இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தும் மரணத்தோடு முடிந்துவிடும். அதன்பின் தொடர்வதில்லை. ஆனால் மறுமைத் துன்பங்களுக்கோ எல்லையோ முடிவோ இல்லவே இல்லை. தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வுலகில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து நெஞ்சுருகி இரவு பகலாகப் பாடுபட முன்வரும் மனிதநேய ஆர்வலர்கள், மறுமைத் துன்பத்தைப் போக்க முன்வராத காரணம் என்ன? ஒன்றில் மறுமையைப்பற்றி அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருக்கலாம்; அல்லது அரைகுரை நம்பிக்கையுடன் இருக்கலாம். மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மறுமை என்று ஒரு அசலான நிரந்தரமான வாழ்க்கை நிச்சயமாக இருக்கிறது.
    தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது மனிதன் எப்படி இவ்வுலக வாழ்க்கைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருந்தானோ, அதேபோல் இவ்வுலகில் இருக்கும் மனிதன், மறு உலகைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். ஆனால் அதற்கு மாறாக எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்க்கையை மனிதன் கர்ப்பப்பையிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னரே எப்படி அறிந்து கொண்டானோ அதே போல், இவ்வுலகிலிருந்து மறு உலக அடைந்த பின்னரே அதை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான்.
    அந்த மெய்யான மறு உலக வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் இல்லாத இன்பகர வாழ்க்கையை ஒருவன் அடைய விரும்பினால் தன்னையும் மக்கள் அனைவரையும் மற்றும் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட மலக்குகளையோ, ƒின்களையோ, மனிதர்களையோ, சிலைகளையோ இதர எந்த படைப்பையுமே இணையாக்காமல் மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகிதரர்கள் பின்னால் செல்லாமல் அவர்களை இடைத்தரகர்களாக, ரப்புகளாகக் கொள்ளாமல், இறைவனுடைய இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனையும், அதன் செயல் வடிவமான இறுதி நபியின் ஆதாரப்பூர்வமான நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றக் கடமைப்பட்டுள்ளான்.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ
   
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்ப  

 

Sunday, October 24, 2010

இஸ்லாத்திற்கு எதிரானவரா பெரியார்?

Posted by Mr.Mobiles Service And Training Center 5:02 AM, under | No comments

பெரியார் இந்து மதத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர நினைத்திருந்தார் - இஸ்லாம் குறித்து விமர்சன சிந்தனைகளைக் கொண்டிருந்தார் - அவர் இஸ்லாத்தைப் பாராட்டியதாகக் கூறுவது தவறு என்றெல்லாம் கருத்துப்பட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "பெரியாரோடு ஒரு பயணம்' என்ற கருத்தரங்கில் பேசியதை, பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் சன் டி.வி. வீரபாண்டியன் ஆகியோரிடத்தில் எடுத்துக்காட்டி அவர்களது கருத்தை கேட்டோம். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். (-ஆர்)

""நபிகளின் வாழ்க்கையை அறியும்போது, எனக்கு இஸ்லாமிய உணர்வு ஏற்படுகிறது என்றார் பெரியார்''
- - அ. மார்க்ஸ்
கொளத்தூர் மணியா அப்படிச் சொன்னார். நான் நம்பவில்லை. கௌத்தூர் மணி நேர்மையான கருத்துக்களை திரிக் காமல் பேசக் கூடியவர் என்றே நான் நம்பு கிறேன். இந்தப் பேச்சை பதிவு செய்திருக் கிறீர்களா? என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தவறாக சொல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருந்த போதிலும் இப்படித்தான் அவர் சொன்னார் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்கான நான் பெரிதும் வருந்துகிறேன்.
பெரியார் குறித்து ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்த மணி முயற்சிப்பது வருந்தத்தக்கது. பெரியார் மிகத் தெளிவாக இஸ்லாம் குறித்து பேசியிருக்கிறார். எல்லா மதங்களையும் ஒழிக்க மாநாடு போடும் நீங்கள், இஸ்லாத்தை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று கேட்கப்பட்ட கேள் விக்கு, ""எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஏதாவது ஒரு மதம் இருக்க வேண்டுமானால் அது இஸ்லாமாகத் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன் னவர் பெரியார். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்களை இந்து மதத் திற்கு கொண்டு வர நினைத்திருந்ததாகச் சொல் வது வேதனை மட்டுமல்ல வியப்பாகவும் இருக்கிறது.
அதற்கான உரிய ஆதாரங்களை மணி தர வேண்டும். பெரியார் இஸ்லாத்தை தீண்டத் தகாதவர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைந்தார் என்று சொல்வதும் விஷமத்தனமானது. பெரி யாரிடம் எல்லோரையும் இஸ்லாத்திற்கு வரச் சொல்லும் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வரவில்லை என்று கேட்டபோது, ""இஸ்லாத்தில் இல்லாமல் இருந்தால்தான் நான் இந்து மதத்திற்கு எதிராக விமர்சிக்க முடியும்'' என்று பதில் சொன்னவர் அவர்.
அது மாத்திரமல்ல, இஸ்லாமிய நம்பிக்கைக ளில் ஒன்றான நபிகள் நாயகம் தான் இறுதி இறைத் தூதர் என்கிற கருத்தையும் ஏற்றுக் கொண்டவர் பெரியார். அவருக்குப் பின் அந்தத் துறையில் யாரும் இல்லாததனால் அவர் இறுதித் தூதர் என்கிற கருத்து என்று சொன்னார். அது போலவே ஹஜ் யாத்திரை போவதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இந்து மதத் தைப் போல எல்லாப் பாவங்களையும் செய்து விட்டு, கோவில் குளத்திற்குப் போய் குளித்தால் போதும் என்கிற அர்த்தத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதில்லை. அது ஒரு மதக் கடமையாக நபிகள் தோன்றிய இடத்திற்கு சென்று வருதல் என்கிற பொருளில் மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

எனவே இஸ்லாம் குறித்து பெரியார் தொடர்ச் சியாகப் பாராட்டும் வகையிலேயே பேசியிருக் கிறார். அது மாத்திரமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்கிற கருத்து வந்தபோது கிறிஸ்தவ மத்திலும் சாதி உள்ளது. இஸ்லாத்திற்கு மாறு வதே சிறந்தது என்றும் அவர் மொழிந்துள்ளார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்குச் செல்வது என்கிற முடிவெடுத்தபோது கூட இஸ்லாத்திற்குச் செல்வது சிறந்தது என்கிற கருத்தை பெரியார் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை அவர் விமர்சித்தது என்பது இன்று உண்மையான முஸ்லிம்கள் எல்லோரும்
விமர்சிக்கக் கூடிய அம்சங்களைத்தான் எடுத்துக் காட்டாக தர்காவை வணங்குவது, கந்தூரி விழா எடுப்பது, பேய் பிசாசு ஓட்டுவது முதலான மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தில் புகுந்திருப்பதைத் தான் அவர் விமர்சித்தார். இவை தவிர நான் அறிந் தவரை இஸ்லாத்தில் அவர் விமர்சித்திருப்பது பெண்களுக்கு ஹிஜாப் என்னும் முகத்திரை போடுகிற அம்சத்தைத்தான் அவர் கண்டித்தார்.
எனவே பெரியார் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது அடிப்படையில் பெரியாரை புரிந்து கொள்ளாத ஒன்றாகும். அது மாத்திர மல்லாமல் சமீபத்தில் வந்த ஆணைமுத்து தொகுதிகளில் பெரி யார் ஓரிடத்தில், ""நபிகளின் வாழ்க் கையை அறியும் போது, எனக்கு இஸ் லாமிய உணர்வு ஏற்படுகிறது'' என்கிற பொருள்பட குறிப்பிட்டுள்ளார். பெரியார் இருந்த வரைக்கும் எந்த அம்சங்களிலும் அவர் இந்துத்து வாவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் முல்லைப் பெரி யார் அணை விஷய மாக சாலை மறியல் போராட்டம் நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பு, பெரியார் திராவிடர் கழ கம் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நான் பெரிதும் மதிக்கும் மணி, இவ்வாறு பேசியிருப்பது எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உறுதி செய்கிறது.

ஆனாலும் இப்போதும் கூட மணி அப்படி பேசியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். பெரியார் கடைசி பல ஆண்டுகள் பொது மேடைகளில் கைலியுடன் தோன்றி னார் என்பதைக் கூட நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதை வெறும் உடல் நோயின் விளைவு என்று நான் கருதவில்லை. எத்தனை அரசியல்வாதிகள் இப்படி யான ஒரு நிலையில் கைலியுடன் பொது மேடைகளில் தோன்றக் கூடியவர்களாக இருப்பார்கள்?

தயவு செய்து நீங்கள் மணியிடம் இன்னொரு முறை இப்படித்தான் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங் கள். அவர் இல்லை என்று சொன் னால் நான் மகிழ்வேன். அவர் மீதுள்ள மரியாதைகளை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

""இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு ஒரு வழிமுறையாக இருக்கும் என்றார் பெரியார்''
- வீரபாண்டியன்
இஸ்லாம் குறித்து பெரியாரின் கருத்துக்களை பெரியாரியவாதிகள் இருட் டடிப்புச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இஸ்லாம் என்பது தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாமல் கிடந்த மக்களுக்கான ஒரு மாற்ற மருந்து என்கிற கருத்தை பெரியார் கொண்டிருந்தார். அதே வேளையில் மதம் மாறுவது பற்றி அம்பேத்கர் ஆலோசனை கேட்டபோது, ""நீங்கள் போய் புத்த மதத்தில் சேருங்கள், நீங்கள் முடிவு செய்து விட்ட விஷயத்தில் நான் தலை யிட விரும்பவில்லை. ஆனால் சாதாரண மாய் போகதீர்கள். கூட்டம் கூட்டமாகப் போனால்தான் உங்களை அங்கே மதிப் பார்கள். பெரும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதே வேளையில், நான் பிறந்த - நான் வாழ்ந்து கொண்டிருக்கிற மதத்தில் இருக்கிற பிரச்சனை களை சரி செய்வதற்காக இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் போனால் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் உரி மையை நான் இழந்து விடுவேன். அதனால் கடைசி வரையில் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட் டம்தான் நடத்துவேன். இங்கி ருந்து கொண்டு தான் இவர்களிடத்தில் சண்டை செய்வேனே தவிர மதம் மாற மாட்டேன்'' என்று சொன்னார்.
அதே நேரத்தில், இந்து மதத்தின் பிற்போக் குத் தனங்கள், இங்கிருக்கிற தீண்டாமைக் கொடுமை, ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக - தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு வடிகாலாக, ""நீங்கள் இஸ்லாத்திற்குப் போங்கள். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சாதிப் பிரிவுகள் இல்லை. அந்த மார்க்கத் தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு அது ஒரு வழி முறையாக இருக்கும்'' என்று அவர்க ளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், எல்லா மக்களையும் மதம் மாற்றுவது, மதத்திற்கு மாறிப் போவது என்கிறபோது தான் மாறத் தேவையில்லை என்றும் பெரியார் சொன்னார். எனவே பெரியாரிய வாதி இஸ்லாம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை இருட்ட டிப்புச் செய்யத் தேவையில்லை. ஒரு வேளை பேராசிரியர் பெரியார் தாசன் அவர்கள் அண்மையில் இஸ் லாத்திற்கு மாறிப் போனதைப் பற்றி திராவிட இயக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் வந்ததை நான் படித்தேன். அவர் மாறிப் போனது ஒரு பெரியாரியவாதி, ஒரு பகுத்தறிவாளர் என்று சொன்ன நாத்திகவாதி. அப்படி இஸ்லாத் திற்கு மாறிப் போகிறாரே என்கிற கோபத்தில் திராவிட இயக்கப் பத்தி ரிகைகள் கடும் விமர்சனம் செய்ததை நான் பார்த்தேன். அந்த அடிப்படை யில் அவர்கள் இது போன்ற கருத் துக்களை சொல்லியிருக்கலாம்.

அதே நேரத்தில் இஸ்லாம் என் பது உட்பிரிவுகள் ஏதுமில்லா மல், மனிதர்களை சாதிப் பிரிவுகள் ஆக்கி விட்டு, பேதப்படுத்துகிற வேலை யைச் செய்வதில்லை. அங்கே சமத் துவம் இருக்கிறது என்கிற பெரியா ரின் கருத்திலிருந்து பெரியாரியவாதி கள் மாறுபடவும் வாய்ப் பில்லை.
பெரியாரியவாதிகள் எனப்படு வோர் உயர்சாதி மேலாண்மையை, உயர்சாதிக்காரர்களின் கொடுமை களை எதிர்த்துப் போராடுவதில் பின்வாங்குகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில் அவர்கள் எந்த மதத்திற் காகவும் பிரச்சாரம் செய்ய மாட் டார்கள். மதம் என்பது மனிதர் களுக்கு "அபின்' என்கிற கருத்துக் கொண்டவர்கள் தான் அவர்கள். அதுதான் அவர்களின் கருத்தாக்கம். பல சமூகப் பிரச்சனைகள் வருகிற போது, உதாரணமாக பாபர் மஸ் ஜித் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற பிரச்சனைகளின் போது இஸ்லாமியச் சகோதரர்க ளோடு அவர்கள் கைகோர்த்து நின்றதை நாடு பார்த்தது. பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்களே தவிர மதப் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவ தில்லை. இதுதான் அவர்க ளின் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன்.

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல்.

Posted by Mr.Mobiles Service And Training Center 5:02 AM, under | No comments

SHANAWAS WITH TIRUMA
திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? - ஆளூர் ஷாநவாஸ்.
நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?

இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.

திருமாவிடம் விடை இருக்கிறதா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, "டை" கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.

சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.

இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.

அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுத்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.

சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், குண்டர் சட்டங்கள் மூலம் சேரி மக்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து எழுந்தவர் திருமாவளவன்.

தனித்தொகுதியும், அரசியல் உரிமையும் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.

இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்துப் போராடி வருகின்றார்.

இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை "தொப்புள்கொடி உறவு" என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.

இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப்பெற்றுத் தொடர்கிறது.

தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.

தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் பார்ப்பனீயம் மென்று விழுங்கிவிட்டது.

தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்தது விட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.

2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.

பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.

மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.

அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.

1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

“எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

இப்படியாக… தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.

“மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.

முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.

தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு உறைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.

தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.

நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன். இவ்வாறு, தொடர்ச்சியாக… அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்…

நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்…

முஸ்லிம்களுக்காகப் பொதுத் தளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்…

"தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை" என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.

இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

"பொதுத்தளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே" என்ற நன்றி உணர்வும், "இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே" என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

“என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.

முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.

அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.

தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் இன்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.

ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காகக் கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.

காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிர மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.

1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கும் வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.

தென்னகத்தில் வணிகப்பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.

காங்கிரசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கில் இணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.

முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதில் தான் இருக்கிறது.

காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்

தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.

500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்.

முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.

எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.

இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.

தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். "நபிகள் நாயகம் பிறந்த தின விழா" என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட "மீலாது விழா"க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.

முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னோடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.

அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?

வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?

காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?

திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?

எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.

தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா.

“டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்” என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர். இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.

தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். ஆனால் தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் போது மட்டும் சமூக நீதிக் கொள்கையை மறந்து விடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.

கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.

கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.

பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.

தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.

காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.

நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?

இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.

திருமாவிடம் விடை இருக்கிறதா?

[சமநிலைச் சமுதாயம், ஜூலை-2010 இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]
-----------------------
ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு திருமாவளவன் பதில்!
திருமாவளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா ஏமாற்றமா என்றத் தலைப்பில், சமநிலைச் சமுதாயம் ஜூலை இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருந்த கட்டுரை அரசியல் சமூக அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிய அந்தக் கட்டுரை வெளியான நாள் முதல் இன்று வரை அது குறித்த உரையாடல் கூர்மையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் சமநிலைச் சமுதாயத்தையும், கட்டுரையாளரையும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர்.

திருமாவின் முஸ்லிம் அரசியல் குறித்த அந்தக் கட்டுரையை திருமாவளவன் படித்தாரா? அதற்கு அவர் பதில் சொல்வாரா? அல்லது மற்ற அரசியல் வாதிகளைப் போல சிக்கலான விசயங்களுக்கு பதிலளிக்காமல் மெளனம் காப்பாரா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும் சமுதாய மக்களிடம் எழுந்தது.

இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 05 -09 -2010 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய தோழர் திருமாவளவன், தமது முஸ்லிம் அரசியல் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் வரவேற்பதாகவும், அதற்கு செயல்பூர்வமாக விடை அளிக்க இருப்பதாகவும் கூறினார்.

முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்து அரசியல் எழுச்சி அடைவதற்கான தொலை நோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

திருமாவின் இப்தார் உரை முழுவதும்,சமநிலைச் சமுதாயத்தில் வெளியான கட்டுரைக்கான பதிலுரையாக இருந்தது. ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு தமது பதில் இந்த உரைதான் என்று திருமாவும் அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு, தலித் - இஸ்லாமியர் அரசியல் கூட்டணி.. திருமா அறிவிப்பு !

இந்த இனிய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிற இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த இப்தார் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு உன்னதமான சமூக உறவு வலுப்பெறவும், அதன் மூலம் அரசியல் அரங்கில் ஒரு நிரந்தரக் கூட்டணியை இரண்டு சமூகங்களும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

திருமாவளவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? வழக்கமாக நடைபெறும் இப்தார் நாடகங்களைப் போல இதுவும் ஒரு நாடகமா? என்கிற ஐயம் இஸ்லாமிய சமூக மக்களிடம் உருவாகி இருக்கலாம். அல்லது இனி உருவாகலாம். இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

'திராவிடக் கட்சிகளிடம் முஸ்லிம்கள் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை; இந்த நிலையில் திருமா வளவனும் இங்கே தொப்பி போட்டுக் கொண்டு வருகின்றாரே என்ற ஐயம் பலருக்கும் இங்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திருமாவளவன் பதில் சொல்வாரா' என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட, நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே..

நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

திருமாவளவன் இப்படி எல்லாம் தொப்பி போட்டுக் கொண்டு வந்து, விருந்து உண்ணுவது ஏன் என்பது ஒரு இயல்பானக் கேள்வி தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

நான் எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நீங்கள் முப்பது நாட்கள் நோன்பிருக்கின்றீர்கள், முப்பது நாட்களும் இல்லாவிட்டாலும், ஒரு மூன்று நாளாவது நோன்பிருக்க வேண்டுமே என்ற உள்ளுணர்வின் அடிப்படையில், நானே விரும்பி அறிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதை கடைபிடித்தும் வருகிறேன் தோழர்களே.

வாழ்விலும் இருக்க வேண்டும், தாழ்விலும் இருக்க வேண்டும் என்பதை.. வார்த்தையில் மட்டும் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவன் நான். இப்தாரிலே மட்டும் இருக்க வேண்டும் சகரிலே இருக்கக் கூடாது என்றில்லாமல், இப்தாரிலும் இருப்பான் திருமாவளவன் சகரிலும் இருப்பான் திருமாவளவன், சகரிலும் இருந்து விட்டு இப்தாரிலும் இருந்து விட்டு இடையில் நோன்பில் மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. நோன்பிலும் இருப்பான் திருமாவளவன் என்பதை உறுதிப் படுத்தக் கூடிய வகையில் தான் நான் செயல் பட்டு வருகிறேன்.

இப்படி நான் செயல் படுவதும்,முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து நான் போராடுவதும், அரசியல் ஆதாயத்துக்காக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.அதற்கு விடை சொல்ல விரும்புகிறேன்.. ஆம், அரசியல் ஆதாயத்திற்காகத்தான். எனக்கு மட்டுமல்ல நமக்கு, அந்த அரசியல் ஆதாயம் நமக்கு..

நமக்கு அரசியல் ஆதாயம் வேண்டும். நாம் எந்த ஆதாயமும் கருதாமல் எல்லோரையும் தோளில் தூக்கிச் சுமக்கிறோம். தலித்துகளும் அப்படித்தான் முஸ்லிம்களும் அப்படித்தான். பிற சிறுபான்மை மக்களும் அப்படித்தான். ஆக அரசியல் ஆதாயம் கருதாமல் இவ்வளவு காலம் உழைத்தது போதும். இனி நாம் அரசியல் ஆதாயம் கருத வேண்டும். நமக்கு அதிகாரம் வேண்டும்.

ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற இரண்டு வர்க்கம். ஆளப்படுவோர் எப்போதும் அடக்கப்படுவார்கள். ஆளப்படுவோர் எப்போதும் சுரண்டப்படுவார்கள், ஆளப்படுவோர் எப்போதும் பழிசுமத்தப்படுவார்கள்; இழிவுபடுத்தப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள். ஆள்வோர் எப்போதும் தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிக் கொண்டே இருப்பார்கள்.

சர்வதேச அரங்கில் தான் மட்டுமே 'தாதா' வாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அமெரிக்கா, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு யார் பிரதமர் என்று நீயும் நானும் கவலைப்படவில்லை, அமெரிக்காகாரன் கவலைப்படுகிறான்.

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் அந்தந்த நாட்டு மக்களை விட அமெரிக்காகாரனுக்குத்தான் அதிக கவலை..ஏன் அவனுக்கு அந்தக் கவலை? அவனது ஆளுமையையும், சர்வதேச 'தாதா' தனத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள அவனுடைய ஆதரவாளர்கள் உலக நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்புகிறான்.உலகம் முழுவதும் தனக்கு வேண்டியவர்களின் ஆட்சி நடைபெறும் போதுதான் தனது ஆதிக்கம் நிலைபெறும் என்று அவன் சிந்திக்கிறான்.

எதற்கு இதை நான் சொல்கிறேன் என்று சொன்னால்.., யார் ஒருவர் அல்லது எந்த ஒரு சமூகம் தான் ஆளப்படுவதில் இருந்து மீளப்படுவதை விரும்புகிறார்களோ, ஒடுக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, சுரண்டலில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் துடிக்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேடல் வேண்டும்.

இறைவனிடத்திலே நாம் அமைதியைத் தேடுகின்றோம். ஆனால் 'இறை' என்கிற அரசிடம் நமக்கான அதிகாரத்தை இன்னும் நாம் தேடவில்லை. ஆக, அதிகாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய தேடல் இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய வேட்கை இல்லாமல், நம்மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மால் மீளவே முடியாது.

அந்த அடிப்படையில் தான் தலித் மக்களிடத்திலே, புரட்சியாளர் அம்பேத்கர், ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.அந்த விழிப்புணர்வு இன்றைக்கு தலித் மக்களிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் இங்கே எழுந்து வந்திருக்கிறது. இதை நான் நெஞ்சுயர்த்திச் சொல்கிறேன். அம்பேத்கரின் அந்தக் கொள்கை வழியில் தான் தலித் மக்களை நாங்கள் அமைப்பாக்கி வருகிறோம்..

இன்றைக்கு திருமாவளவன் மீது முஸ்லிம் சமூகத்தினர் சந்தேகப்படுகிறார்கள் என்று சொன்னால், அதை எண்ணி நான் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் சந்தேகப்படுவது என்றைக்குத் தொடங்கி விட்டதோ அப்போதே விழிப்புணர்ச்சியும் தொடங்கி விட்டது என்று பொருள். நம்மைப் பிறர் ஏய்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி விழிப்புணர்வே இல்லை என்றால் நமக்கு சந்தேகமே வராது. எங்கே சந்தேகம் வருகிறதோ அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது என்று பொருள்.

ஆக இஸ்லாமியர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தமிழ்நாட்டு இஸ்லாமியச் சமூகம் விழிப்படைந்து விட்டது. கடந்த கால வடுக்களைத் தடவிப் பார்த்து, தம்முடைய இயலாமையையும் தமது தோல்விகளையும் தமது ஏமாற்றங்களையும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

ஆக இந்தச் சூழ்நிலையில் இப்போது நான் சொல்கிறேன்...

2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இப்போதே நான் அறைகூவல் விடுக்கிறேன். அரசியல் கூட்டணிக்கு அழைக்கிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே, தவ்ஹீத் ஜமாஅத் இயக்கமே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமே, தேசிய லீக் இயக்கமே, பாப்புலர் பிரன்ட் எனப்படும் மக்கள் முன்னணியே, இன்னும் என்னென்ன இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றனவோ அத்தனை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை முறை.ஆனால் அது மதம் என்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க அமைப்பாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக நம்முடைய நபிகளார் விளங்குகின்றார். தமது நாற்பது வயதுக்குப் பின்னர் தான் நபிகளார் பொதுப் போதனைகளைத் தொடங்கி இருக்கிறார். மிகக் குறுகிய வட்டத்தில் தமது நண்பர்களோடு முதலில் கருத்துக்களைப் பரிமாறி இருக்கிறார்.

பொதுப் போதனைகளில் அவர் இறங்கிய உடனேயே அன்றைய ஆட்சியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நபிகளாரின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கத் தொடங்கினர். அப்போது அவர் தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவை நோக்கிப் போனார். மக்காவிலிருந்து நபிகளார் மதீனாவை நோக்கிப் போனது 'ஹிஜ்ரா' என்றழைக்கப் படுகிறது. அது ஒரு புனிதப் பயணம் என்றழைக்கப்படுகிறது.

ஆனால் அவர் எதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டார்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் உயிர் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார். அதுவரையில் மதீனாவுக்கு யாத்ரிப் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நபிகளார் அங்கு சென்றபிறகு, இவர் மதீனத்து நபி, ஆகவே நபிகளின் பட்டணம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

அங்கு தான் நபிகளாருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கைப் பெருகியது. அவரது போதனைகளைக் கேட்கும் கூட்டம் அதிகரித்தது. அங்கு தான் நபிகளார் ஒரு அமைப்பாக திரட்சியுற்றார். தனி நபராக இருந்தவர் மக்காவிலே ஒரு சிறு குழுவாக மாறினார். பின்பு மதீனாவிலே ஒரு அமைப்பாக வளர்ந்தார். அந்த அமைப்பு ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போரிடும் படை வலிமை உள்ளதாக மாறியது.அந்தப் படை வலிமையோடு மக்காவிற்குத் திரும்புகிறார். மக்காவில் ஆளும் வர்க்கத்தோடு மிகப்பெரும் யுத்தத்தை நடத்துகிறார்..அதன் பிறகு தான் அது ஒரு இயக்கமாக மாறியது.

ஆக, நபிகளாரிடம் இருந்த அந்த ஆளுமைப் பண்பு, அந்தத் தலைமைப் பண்பு, அந்தப் போர்க்குணம் தான் ஒரு அமைப்பாக மாறி ஒரு இயக்கமாக மாறி இன்று மிகப்பெரிய நிறுவனமாக உலகையே வியாபித்து நிற்கிறது. இன்றைக்கு உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இஸ்லாத்தைப் போல, கட்டுப்பாடும் ஒழுங்கும் உள்ள ஒரு மதத்தை எங்கும் அடையாளம் காட்ட முடியாது.

நான் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு இதை சொல்லவில்லை.

மக்காவிலே கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்திலே, எத்தனைக் கோடிப் பேர் திரண்டாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல், முட்டிக் கொள்ளாமல், அவர்கள் இறைவனை வழிபடுவதில் சரிசமமாக இருந்து மண்டியிட்டுத் தொழுகை நடத்துவதை ஒரு மிகப் பெரிய ஓவியமாக நம்மால் பார்க்க முடிகிறது.

வேறு எந்த மார்க்கத்திலும், மதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டை பார்க்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்தையும், நல்ல தலைமைப் பண்பையும் கற்றுத் தருகின்ற ஒரு மிகப்பெரிய மத நிறுவனத்தை ஒரு தலைவரால் கட்டியமைக்க முடிந்தது என்று சொன்னால்., அதற்கு எவ்வளவு பெரிய அர்பணிப்பும் போர்க்குணமும் தியாக உள்ளமும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நபிகளாரைப் போல வியூகமும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள் நமக்குத் தேவை. அவரை நான் இறைவனின் தூதர் என்று பார்ப்பதை விட, அரசியல் தளத்தில் நின்று கொண்டு, ஒரு மகத்தான அரசியல் தலைவராகப் பார்க்கிறேன்.அதைப் போல தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திற்குத் தேவை.

தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் வருகின்ற போது, எத்தனைக் குழுக்கள் இருந்தாலும் அவை ஒற்றை வடிவமாய், ஒற்றை முகமாய் இருக்கும். தலைமைப் பண்புள்ள தலைவர்கள் உருவாகாத வரையில் குழுக்கள் மேலும் மேலும் பல குழுக்களாகச் சிதறும். ஒற்றுமை பாழ்பட்டு விடும்.

ஆக, இதையெல்லாம் மனதில் கொண்டு நாம் நமது பயணத்தை திட்டமிட வேண்டும். இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்கிற அவசரம் நமக்கு வேண்டாம். 2016 வரை நாம் உழைப்போம், நமக்காகத் திட்டமிட்டு உழைப்போம், அரசியல் சக்தியாய் எழுச்சி பெறுவோம். அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம்.

இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கத்த்தோடும் திருமாவளவன் உங்களோடு அமரவில்லை; எந்த எதிர்பார்ப்போடும் திருமாவளவன் உங்களோடு உரையாடவில்லை. 2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு என்கிற முடிவை நான் எடுக்கிற போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடும் சேர்ந்து எடுக்கவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக் கூடிய இஸ்லாமியத் தோழர்களோடு சேர்ந்துதான் இந்த முடிவை நான் எடுத்தேன்.

முஸ்லிம்களை நோக்கிய எனது பயணத்திற்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு சமூகத்தின் விடுதலை அரசியல் களத்தோடு தொடர்புடையது. அதை நாம் மறந்து விடக் கூடாது.

மதமும் அரசும் இரட்டை விழிகள் மாதிரி. இரண்டு விழிகளால் ஒற்றை உருவத்தைப் பார்ப்பது போல மதமும், அரசும் சேர்ந்து தான் மக்களை வழிநடத்துகிறது. அரசு என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது. அதிகாரம் என்பது யாருக்கோ சில நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. குறிப்பிட்ட சில இனத்துக்குச் சொந்தமானதும் அல்ல. உன்னாலும் என்னாலும் உருவானது தான் அதிகாரம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆகவே, மண் ஒரு சொத்து என்பதைப் போல,கட்டிடம் ஒரு சொத்து என்பதைப் போல, வண்டி வாகனம் ஒரு சொத்து என்பதைப் போல, செல்வம் ஒரு சொத்து என்பதைப் போல, பிள்ளைகள் ஒரு சொத்து என்பதைப் போல அதிகாரம் ஒரு சொத்து. இந்த மண்ணில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல, இந்த நீரில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல அதிகாரத்திலும் எனக்குப் பங்கு உண்டு.

ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே இந்திய அதிகாரம் சொந்தமானதில்லை. இதில் திருமாவளவனுக்கும் பங்குண்டு, இந்த அதிகாரத்தில் யூசுபுக்கும் பங்கு உண்டு.

நான் இந்த மண்ணில் குடிமகனாக இருக்கிற காரணத்தினால், நான் ஓட்டுப் போடுகிற உரிமை பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் சேர்ந்து இந்த நாட்டையும், அதன் சட்ட திட்டங்களையும் உருவாக்கி இருக்கிற காரணத்தினால், நாம் இந்தச் சட்டங்களை மதிக்கிற காரணத்தினால் உருவானது தான் அரசு, உருவானது தான் அதிகாரம். ஆகவே அந்த அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு, உனக்கும் பங்குண்டு.

இந்த எனக்கும் உனக்கும் என்கிற சொல்லுக்கு இடையில் உள்ள சுவரை உடைத்து விட்டு, நமக்கு என்ற ஒற்றை சொல்லால் அழைப்போம். நன்றி!
THANKS TO : http://www.satyamargam.com/1549

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

Posted by Mr.Mobiles Service And Training Center 5:01 AM, under | No comments

குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.

கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் "இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.

கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது "பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், "நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் "சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.

பீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான "ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.

இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.

சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. "அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில் 'புதிய ஜனநாயகம்' இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.

- சத்தியமார்க்கம்.காம்

தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். "மகனே! நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.

தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: "என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''

மூலம் : தி ஹிந்து

தமிழில் : சுந்தர் - புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்) TANKS TO;/vanjoor-vanjoor.blogspot.com

நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

Posted by Mr.Mobiles Service And Training Center 5:00 AM, under | No comments


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....

• நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
• அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...

இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...

• இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?

• ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?


குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.

இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர்.

பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.

முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.

அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.

முஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக பக்கங்கள் தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.

இதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.
இந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

கணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான
சில பங்களிப்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்

கணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை
1. எண் கணிதம் (Arithmetic)
2. அட்சர கணிதம் (Algebra)
3. கேத்திர கணிதம் (Geometry)
4. கோணவியல் (Trignometry)

இந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.

1. எண் கணிதம் (Arithmetic):எண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like 11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல் (Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.

எண்கள்:
.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் "0,1,2,3,4,5,6,7,8,9", இந்த எண்களுக்கு பெயர் "அரேபிய எண்கள் (Arabic Numerals)" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.



நீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும் எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.

இந்த "சைபர் (Cipher/Cypher, '0') " என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க "சிபர் (Sifr)" என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம்

'0' வை குறிக்க பயன்படுத்தும் சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான்.

அரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள் என்று பெயர் சூட்டிவிட்டனர்.

அதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று அழைக்கப்படுகின்றன.

எண்ணும் முறை:

மேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.

அரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்.
• கிரேக்கர்கள்

• எகிப்தியர்கள்

• ரோமானியர்கள் மற்றும்

• ஹிந்துக்கள்

இவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது. முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும் புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.

1-I, 2-II, 3-III, 4-IV, 5-V, 6-VI ...... 10-X, 11-XI, 12-XII....

இந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும் கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323 என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100, X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான்.

மற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும் குழப்பம்தான். உதாரணத்துக்கு 302 என்று எழுதவேண்டுமானால் CCCII என்று எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

ஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.

அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.


இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.
ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை.

பின்னர் ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை.

குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '௦௦௦0' இருந்தது ( தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது), இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)' என்ற எழுத்தை "ஒன்றுமில்லாததை (Void/empty place)" குறிக்க பயன்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்கு 302 ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று பயன்படுத்தி இருக்கிறார்.

ஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக) கருத இல்லை. அதனை "ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place but didn't include it in the set of Numbers) " குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.பதிவிற்கு வருவோம்....

சரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு கணிதத்தில் பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது.

ஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன் ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள் எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர்.

முஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க "சிபர் (sifr)" என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் "சிபர் (sifr)" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers).

அதாவது சைபரை (௦0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது.

இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.
அதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் "பத்து" என்றால் ஒன்று போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து பத்தொம்பது வரை எண்ணி பிறகு "இருபது" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம் அல்லவா, இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc....

இன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள் தான் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக கணக்கிடப்பட்டன.

"Hindu Mathematicians in Southern India first created zero but did not recognise it as Number. They used Zero only as a place holder when no number existed. Add 4+6, you get 10, one in tens column and 0 in one's column. The Hindus realised that they needed a way to indicate that there was no number in units position.

For 400 years, that was the only use of Zero. No one added, subracted, multiplied, or divided it. It was only used to hold an empty place for a missing Number. So, 2003 could be written differently than 2030 or 23.

Before 800 AD the Hindu number system migrated west into Arab world. There a brilliant Mathematician, Al-Khwarizmi, invented Zero as a Number. He realised that it has to be a number in order for the emerging system of algebric equation to work"
--- Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.

முஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது.

அதுமட்டுமல்ல, "தசம பின்னல் (Decimal Fractions)" முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5 என்று உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.

பின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...

ஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய

• எண்களாகட்டும் (0 to 9),

• எண்ணும் முறைகளாகட்டும் (10,30,8000...),

• கூட்டல் போன்ற செயல்களாகட்டும்,

• தசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது


இப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

சிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:

சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே.



இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.

இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி.

தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.

இந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள்.

2. அட்சர கணிதம் (Algebra)


இன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்கள் தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம் "கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on calculation by completion and balancing, 830 AD)". இந்த "அல்-ஜபர்" என்ற வார்த்தைதான் "அல்ஜீப்ரா" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில் மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் "அல்காரிதம் (Algorithm)" என்பது.

மிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம் (Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி காட்டினார்.

இவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது.

• சிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.

• அபுல் கமில் (Abul Kamil) அவர்கள்

• அபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...


இவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.

3. கேத்திர கணிதம் (Geometry)
கணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.

முஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள், பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள். அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர்.

முஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது, அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால் சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி பெயர்க்குமளவு முஸ்லிம்கள் கணித அறிவை கொண்டிருந்தனர்.

முஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில் புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான்.

முஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள் அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால் கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது.

மொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில் காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.

"It had a large number of, geometrical problems for the fundamental construction of plane geometry to the constructions of the corners of a regular polyhedron on the circumscribed sphere of special interest is the fact that a number of these problems are solved by a single span of the compass, a condition which we find for the first time here." --- H.Suter

இந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின் பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்
(Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry) .

கேத்திர கணிதத்தில் "பை (Pi)" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள்.

"In 1424 Al-Kashi published a treatise on circumference, in which he calculated "pi", the ratio of a circle's circumference to its diameter, to nine decimal places. Nearly two hundred years would pass before another mathematician surpassed this achievement"

முஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று.

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்

• முஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள்

• அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)

• நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)

• தபித் பின் குர்ரா (Thabit bin qurra)

• அல்-இஸ்பாஹனி (Al-Isfahani)

4. கோணவியல் (Trigonometry)


கோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின் ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னாள் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது.

முதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவியலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான்.

"It was after this development in Islamic mathematics that the first real trigonometry emerged" --- E. S. Kennedy

• சமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான்.

• சைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.

• டேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிகளின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி....

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்

• அல் கரிஷ்மி (Al-Khwarizmi)

• அல் பதானி (Al-Battani)

• ஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)

• அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)

• அபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)

• அபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)

• தகி அல்-டின் (Taqi Al-din)

• ஜம்ஷெட் அல்-கசி (Jamshed al-Kashi)

• ஓமர் கையாம் (Omar Khayyam)

இப்படிப்பட்ட மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள், அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல் இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம் இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு, தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது.

"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன.

பல கோணங்களிலும், இன்று நாம் படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics

"Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics. Certainly many of the ideas which were previously thought to have been brilliant new conceptions due to European mathematicians of the sixteenth, seventeenth and eighteenth centuries are now known to have been developed by Arabic/Islamic mathematicians around four centuries earlier. In many respects the mathematics studied today is far closer in style to that of the Arabic/Islamic contribution than to that of the Greeks" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics

ஆக, கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகவில்லை.

அப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர். இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின் இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொடங்கியே வான சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினர்.

அவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம்.

இங்கே நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள்.

இதையெல்லாம் ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை? ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன? இறைவனே எல்லாம் அறிந்தவன்.

• நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

• அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

இனி இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான் வந்துள்ளன.

இதையெல்லாம் விடுங்கள், சமீபத்தில் ஒரு மாற்றுமத சகோதரர், ஹைய்தி தீவில் ஏற்பட்ட இயற்கை சீரழிவிற்கு முஸ்லிம் உலகம் என்ன செய்தது? என்று கேட்டார் பாருங்கள்....அதிர்ந்து விட்டேன். ஏன் இது போன்ற எண்ணங்கள் உருவாகுகின்றன?

அவர் கேட்ட கேள்விக்கு ஆதாரங்களுடன் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். ஆனால் அந்த கேள்வி சொல்லும் அர்த்தங்கள் பல இருக்கின்றன...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:

1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada.

References:

1. Tamil translations of Mathematical terms taken from online Tamil dictionary site, tamildictdotcom.

2. Islam: A thousand years of Faith and Power - Jonathan Bloom and Sheila Blair.

3.ARAMCO and Its World: Arabia And The Middle East - Edited by Ismail I. Nawwab, Peter C. Speers & Paul F. Hoye.

4. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America

5. Arabic Mathematics: Forgotten Brilliance? - MacTutor History of Mathematics.

6. Arabic-Hindu numerals - Encyclopedia Brittanica

7. Origin of the Arabic Numerals: A natural history of numbers - Adel S.Bishtawi

8. Marvels of Math: Fascinating reads and Awesome Activities - Kendall F.Haven

9. Muslims Contribution to Mathematics - Shirali Kadyrov.

10. Al-Khwarizmi Biography - Biography base.

11. Muslims Contributions - Net Muslims

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - சட்டம் கண்களைத் திறக்குமா?

Posted by Mr.Mobiles Service And Training Center 4:59 AM, under | No comments

லக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னம் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹபாத் உயர் நீதிமன்றம் சாவகாசமாக வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு எழுத இருக்கிறது.

400 ஆண்டு காலமாக, உரிய ஆவணங்களுடன் நிலை பெற்றிருந்த ஒரு சொத்து யாருக்குச் சொந்தம்? என்ற கேள்வியே அபத்தமானது. இதனை உணர்ந்ததால் தானோ என்னமோ, சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதைத் திட்டமிட்டு தகர்த்து விட்டு, பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் என வழக்கு தொடுக்க வைத்து விட்டனர்.


இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, சிவில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு, ஆச்சரியமான முறையில் சம்பந்தப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைகொண்டிருந்த நிலத்தின் கீழே கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தரக்கோரி தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உலகில் எந்த ஒரு இடத்திலும் இன்று நிலைகொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் கீழே வேறு ஏதாவது கட்டடமோ குடியிருப்போ இருந்ததா என்றொரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் எப்போதோ இருந்த ஏதோ ஒரு கட்டடமோ குடியிருப்போ நாகரீகச் சின்னங்களோ இருந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இன்று சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்க முடியுமா? அப்படி வழங்கினால், வெள்ளை மாளிகையிலிருந்து நமது இந்திய நாடாளுமன்ற கட்டடம் வரை பெரும்பாலான இடங்கள் அரசுகளின் கைகளை விட்டுச் செல்ல வேண்டிய அபத்தமான சூழல் உருவாகும். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் அடிக்கடி நிலத்தடியில் கிடைக்கும் சோழர்காலச் சிலைகளையும் நாணயங்களையும் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் முடிவு செய்தால் எப்போதோ இறந்துபோன சோழர்குலக் குடிமக்களை தேடிப்பிடிக்க வேண்டிய கேலிக்கூத்து உத்தரவையும் நீதிமன்றம் வெளியிடவேண்டிவரும்.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் கீழே கோயில் இருந்ததா? என்ற தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் ஆய்வு முடிவுகளில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நிலத்தில் மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் சில தடய விவரங்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜயபாரதம்(10.09.2010) இதழ் மட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.


இக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் கோயிலின் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. கார்பன் 12, 14 ஆகிய விஞ்ஞான முறைகளில் ஒரு இடத்தை ஆய்வு செய்து, அதில் முன்னர் வாழ்ந்தவர்களின் தடயத்தைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்நிலத்தின் உடமையாளரைத் தீர்மானிக்க ஆரம்பித்தால் என்ன நிலமை ஏற்படும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியத் தேவையேதும் இல்லை. அத்துடன், 400 ஆண்டுகளுக்கும் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய நிலை என்ன என்பதை வெறும் தொல்லியல் ஆய்வு கொண்டு 100 சதம் சரியான முடிவுக்கு வருவதும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவுடையோர் அனைவரும் புரிந்து கொள்வர்.


தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் நில உரிமைக்கான தீர்ப்பு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா? இதுவும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமே.

பாப்ரி மஸ்ஜித்:சங்க்பரிவாருக்கு நிலத்தின் மீது உரிமையில்லை-நீதிபதி சச்சார்
டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார்.

"அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.


என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.


அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம். ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது.


1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை." இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.
நன்றி: பாலைவனத்தூது / மாத்யமம்
20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தை உரிய ஆவணங்களுடன் ஒருவர் சொந்தமாகக் கொண்டு அனுபவித்திருந்தால், அது தற்போதைய உரிமையாளருக்கே சொந்தம் என்பதை நீதிபதி சச்சார் அவர்கள் உரியத் தீர்ப்பு ஆதாரத்துடன் விளக்குவதோடு, பாபரி நிலத்தின் உரிமை எவ்வகையில் பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பாபரி நில வழக்கில் எதிர்தரப்பான வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உட்பட உள்ள சங்கபரிவாரத்தினருக்கு அதனைச் சொந்தம் கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைப்பதைப் பெட்டிச் செய்தியில் காண்க.

வருகின்ற 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்ற பாபரி நிலத் தீர்ப்பு விஷயத்தில், என்ன தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசுகள் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கியக் குற்றவாளியான பாஜக தலைவர் அத்வானியும், "தீர்ப்பு எப்படி அமைந்தாலும் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி" என திருவாய் மலர்ந்துள்ளார். இதைவிட ஒருபடி மேலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர், "தீர்ப்பு எப்படியானாலும் முஸ்லிம்கள் மனமுவந்து நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தேசதுரோகிகள் என்றே எண்ணப்படுவர்" என்று பாபரி நில விஷயத்தைத் தேசதுரோகத்துடன் விஷமத்துடன் தொடர்புபடுத்தி விஷயத்தைக் கக்கியுள்ளார்.


அநியாயமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டட விஷயத்தில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு, தவறைத் திருத்த முன்வராததோடு அந்த நிலத்தையே தங்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும்; இல்லையேல் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாவர் என்று கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்தால் எங்களின் தயையில் நாங்கள் கூறுவதையும் செய்வதையும் விருப்பமில்லையேனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்று, அங்கீகரித்தே வாழ வேண்டும், இல்லையேல் தேசத்துரோகிகள் என்ற முத்திரையுடன் முழுமையாக அழித்தொழிக்கத் தயங்கமாட்டோம் என்றே ஆர்.எஸ்.எஸ் தலைவர் அகங்காரத்துடன் இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.


இந்நிலையில், இதுநாள் வரை இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் என்றும் நம்பிக்கையுடன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, வர இருக்கின்ற தீர்ப்பு மட்டுமே உரிய நியாயத்தை வழங்கும். இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஃபாஸிஸம் தன் வேரைப் பாய்ச்சி வளர்ந்து விட்டச் சூழலில், நீதித்துறையும் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டால், அது உலக அரங்கில் இந்தியாவை ஒருபோதும் தலைநிமிர வைக்காமல் செய்து விடும்.